Skip to content

May 27, 2009

இகோமுசி

சில மாதங்களுக்கு முன்பு, லயன் காமிக்ஸ் வெளி வந்த டெக்ஸ் வில்லரின் அசத்த வைக்கும் 3 பாக சாகஸத்தின் கதைச்சுருக்கும் பின் வருமாரு..

“நவஜோக்களுக்கும் வெள்ளையர்களுக்குமிடையே சமத்துவத்தை நிலைநாட்ட விரும்புகிறார், இரவு கழுகார். ஆனால், மேஜர் வெல்மேன், யானோடோ எனும் நவஜோ மந்திரவாதி மூலம்,  சீறும் கரடி்யை,  வெள்ளையருக்கு எதிராக கலகம் செய்ய தூண்டுகிறார். அதன் மூலம், நவஜோக்கள் அனைவரையும் அழித்துவிட்டு, நவஜொக்களின் பொக்கிசத்தை அடைய நினைக்கிறார், மேஜர் வெல்மேன். ஆனால், இரவுக் கழுகார், தனது சமயொஜித அறிவினாலும், வீரத்தினாலும், மேஜரின் திட்டத்தை தவிடுபொடியாக்கி், நவஜோக்களுக்கும் வெள்ளையர்களுக்குமிடையே அமைதியை நிலைநாட்டுகிறார் “.

கேள பாய் கதைகளில், தரப்படும் அடைமொழிகள் சுவாரசியாமானது. எடுத்துகாட்டுக்கு, மேலே கண்ட கதைச்சுருக்கத்தில், டெக்ஸ் வில்லரின் அடைமொழி இரவு கழுகார் என்றும், நவஜோ தலைவனை  “சீறும் கரடி்” என்றும் குறிப்பிடுகையில் அந்த பாத்திரத்தின் கதைச்சுவை கூடுகிறது.

இரவு கழுகார், சீறும் கரடி் வரிசையில், தமிழகம் வருகிறான் “முரட்டு சிங்கம்”. யார் இந்த முரட்டு சிங்கம் என்று அதிகம் சிந்திக்க வேண்டாம். “இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி” மற்றும், “அறை எண் 305ல் கடவுள்” படத்தை இயக்கிய சிம்புதேவனின் அடுத்த படைப்பு தான் “இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்”, சுருக்கமாக “இகோமுசி”. இதில், முரட்டு சிங்கமாக லாரன்ஸ் தோன்றுகிறார். மேலும், ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்த படம், சுமார் 35 வருடங்களுக்கு பிறகு வெளிவரும் முழு நீள கேள பாய் தமிழ் திரைப்படம்.

என்ன. இப்பவே டிவிடி வாங்க கிளம்பிட்டீங்களா.. Wait.. The Shooting has just began.

Irumbu Kottai Murattu Singam

Irumbu Kottai Murattu Singam

Read more from Movies

Share your thoughts, post a comment.

Note: HTML is allowed. Your email address will never be published.

Subscribe to comments