சுமார் இருபது வருடங்களுக்கு முன்னால், LKG தமிழ் வகுப்பறையில், ‘அ’ னா ‘ஆ’ வன்னா பாடம் நடந்து கொண்டிருந்தது. அ for அம்மா… ஆ for ஆப்பிள்… இ for இங்கிலிஷ் என்று ஒவ்வொரு வார்த்தையாக கற்ற ஞாபகம். அன்று, அருகில் இருந்த நண்பன் “A for என்ன?” என்று கேட்க, அதற்கு “எலிஃபன்ட்” என்று சொல்லி சிரித்தது, இன்றும் சிரிக்க வைக்கிறது. அதே, எலிஃபன்ட்ஐ, தமிழில் “வாரணம்” என்றும் அழைக்கலாம் என்று, என்னைப் போல் தமிழ் அறியாத பலருக்கும், பாடம் புகட்டிய “வாரணம் ஆயிரம்” படத்திற்கு, எனது வாழ்த்துக்களை சமர்ப்பிக்கிறேன்.
“வாரணம் ஆயிரம்” திரைப்படத்தைப் பற்றி மூன்று சொற்களில் சொல்ல வேண்டுமென்றால், சூர்யா..சூர்யா..சூர்யா.. என்று தான் சொல்ல வேண்டும். ஆம். படத்தின் நாயகன், சூர்யா, தந்தை மகன் என்ற இரட்டை வேடங்களில், தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், விடாமுயற்சி, கடின உழைப்பு, என்ற வார்த்தைகளுக்கு முன் உதாரணமாகவும் விளங்கியுள்ளார். தந்தை மகன் பாசம், மகனுக்கு தோழனாய் இருக்கும் தந்தை, தந்தையை போல் வாழ நினைக்கும் மகன், இப்படி தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவின் பல பரிணாமங்களை அற்புதமாக செதுக்கியுள்ளார் இயக்குனர் கௌதம் மேனன். மேலும், ஹாரிஸ் ஜெயராஜின் இசை, படத்திற்கு மெருகேற்றியுள்ளது. சமீரா, சிம்ரன், திவ்யா என்று மூன்று கதாநயகிகளும், கதையோடு ஒன்றி நடித்துள்ளனர். oklahoma குண்டு வெடிப்பு சம்பவம், படத்தில் சிறிது நேரமே வந்து போனாலும், நிகழ் காலத்தோடு ஒன்றுவதால், தசாவதாரம் சுனாமி போல், படத்தின் கதை அறிவுப் பெட்டகமாகவும் திகழ்கிறது.
இப்படி, பல விசயங்கள், படத்திற்கு பக்க பலமாக அமைந்திருந்தாலும், முடிவில்லாமல் தொடர்ந்து செல்லும் கதை, கௌதம் படங்களில் இயல்பாக காணப்படும் மேற்கத்திய சாயல், ஒரே பாடலில் பணக்காரன் ஆகும் கதாநாயகன், என்று சில பல காரணங்கள், படத்தின் ஈர்ப்பு விசையை குறைக்கிறது. இதில் குறிப்பாக, படத்தின் மேற்கத்திய சாயலை பார்க்கும் பொழுது, படத்திற்கு “வாரணம் ஆயிரம்”என்பதை விட “Elephants 1000″ என்ற தலைப்பு மிகவும் பொறுத்தமாக இருக்கும், என்பது என்னுடைய கருத்து.
No related posts.
Anand Muthu says: 
